August 21, 2010

செயலாளர் சித.நாராயணன் செய்திகள்

அருமை உறுப்பினர்களே,
அன்பார்ந்த இலக்கிய ஆர்வலர்களே,
இனிய வணக்கம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும்
கருப்பொருளை மையப் படுத்தி,
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”

உலகெலாம் வியக்க, வீறுநடை போட்டு”
கோவை மாநகரில்,
விழாக்கோலம் பூண்டதை நாமறிவோம்.


தமிழை முனைப்போடு
முன்னெடுத்து செல்வதற்காக நடத்தப்பட்ட
செம்மொழி மாநாட்டுச் சுவடுகள்
இன்னமும் நெஞ்சக் குழியில்
பசுமை கொண்டிருக்கும் தருணத்தில்,
நம்முடைய சங்கத்தின்
முப்பத்தைந்தாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்
உங்களைச் சந்திப்பதில்
உள்ளம் உவகை கொள்கிறது.


மகிழ்ச்சி கொள்ளும்
அதே வேலையில்
முப்பத்தைந்தாம் ஆண்டில் சங்கம்
அடியெடுத்து வைத்துள்ளதை
எண்ணிப் பார்க்கையில்
மலைப்பும் வியப்பும் ஏற்படுகிறது
.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில்,
எழுத்தாளர் மாநாடுகள், எழுத்தாளர் பேரவை,
இலக்கியக் கருத்தரங்குகள்,
தமிழறிஞர்களின் இலக்கிய நிகழ்ச்சிகள்,
சங்க வளர்ச்சிக்கு கலை நிகழ்ச்சிகள்,
சிறுகதைத் தொகுப்பு நூல்கள்,
மூத்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டுகள்
சிறுகதை-கவிதைப் பயிற்சிப் பட்டறைகள்,
அரசு மானியம்,
எழுத்தாளர்களுக்கு அரசு விருதுகள்,
இலக்கியச் சங்கமம் எனும் தலைப்பில்,
ஈப்போ, பங்கோர், லங்காவி ஆகிய நகரங்களில்

ஐந்து இலக்கிய நிகழ்ச்சிகள்!

அடுத்து,
நடைபெறவிருக்கும்,
ஆறாவது இலக்கியச் சங்கமத்தில்,
இலக்கிய நிகழ்வுகளுடன்,
கணினி பயிலரங்கம் நடத்தவும்,
சங்கத்திற்கென அகப்பக்கம்
உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்
இவை அனைத்தும் சஙத்தின் பரிணாமங்கள்.
இப்படிப்பட்ட,
நல்ல பணிகளைச் செய்துள்ள நிர்வாகத்தினர்,
பாராட்டுக்குரியவர்கள்.

அண்மையில்,
நமது சங்கத்தின்,
‘வேரும் விழுதுகளும்’
சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
மகத்தான வெற்றியுடன்
அமைந்ததை நீங்கள் அறிவீர்கள்!

எடுத்த எடுப்பிலேயே
கணிசமான தொகை திரட்டப்பட்டதும்,
கட்டடம் வாங்கும் முயற்சியின் தொடக்கமே
அபாரமாக அமைந்து விட்டதும்,
இலக்கிய உணர்வாளர்களிடமிருந்து
சங்கத்திற்குக் கிடைத்த முதல் மரியாதை ஆகும்.


ஆதரவளித்த அனைத்து நன்நெஞ்சங்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக!

மாநிலத்தின் மாவட்டம் தோறும்
நூல் வெளியிடுவதற்கு சங்கம்
முயற்சித்து வருகிறது.


நூலின் அடுத்த அறிமுக நிகழ்வு
28.08.2010 இல்
அழகு நகரான தைப்பிங்கிலும்,
அதைத் தொடர்ந்து,
அரச நகரான கோலகங்சாரிலும்,
சித்தி பெற்ற சித்தியவானிலும்,
நாட்டின் தலைநகரிலும் நடத்துவதற்கு,
அவ்வட்டாரங்களில் உள்ள
நமது எழுத்தாளர்கள்
ஆவன செய்து வருகிறார்கள் என்பது
நமக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளாகும்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள
உறுப்பினர்களை அன்புடன்
அழைக்கின்றோம்.

நூல் வெளியீட்டின் மூலம்
கட்டட நிதி திரட்டும் அதே வேளையில்,
கட்டடம் எழுவதற்கு
உறுப்பினர்களின் பங்களிப்பும்
இருக்க வேண்டும் என்பதே
நமது அவா, விருப்பம், அன்பு வேண்டுகோள் எல்லாம்.

ஆக, தயாள உள்ளத்துடன்
உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
அதற்கான பற்றுச் சீட்டு

உடனுக்குடன் உங்களுக்கு
வழங்கப்படும்.

ரிங்கிட் மலேசியா ஆயிரம் கொடுக்கும்
உறுப்பினர்களின் பெயர்கள்
கட்டடத்தில் பொருத்தப்படும்
பெயர் பட்டியலில் பதிக்கப்படும்.

இன்று நமது சங்கம்
ஓர் ஆலமரமாக வளர்ந்துள்ளது.
அது இன்னும் ஆழமாக வேரூன்றவும்,
விழுதுகள் பல பெருகவும்
மனமார்ச்சர்யமின்றி ஒன்றிணைந்து
செயலாற்றுவோம்!

- சித.நாராயணன்


August 19, 2010

ஆண்டுப் பொதுக்கூட்ட அழைப்பிதழ்

35 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் - நிகழ்ச்சி நிரல்

அங்கம் ஒன்று:      எழுத்தாளர்கள் அறிமுகம்
அங்கம் இரண்டு:     படைப்பாளர்கள் பாராட்டரங்கம்

பாராட்டுப் பெறும் எழுத்தாளர்கள்
மேநாள் தலைமை தமிழாசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் அவர்கள், ஈப்போ
கவிஞர் கி.கூத்தரசன் அவர்கள், ஈப்போ
ஈப்போ எழுத்தாளர் திரு.அருள் ஆறுமுகம் அவர்கள்

சிறப்புச் செய்பவர்
மதிப்புமிகு டத்தோ கோ.இராஜு DPMP., PMP., KMN., PPT., PJK., JP அவர்கள்
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கப் புரவலர்,
ம.இ.கா ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர்

இடைவேளை - தேநீர்

இரண்டாம் அங்கம் - ஆண்டுப் பொதுக் கூட்டம்

i.வரவேற்புரை -  திரு.சித.நாராயணன் PPT (செயலாளர்)
ii.தலைமையுரை -  திரு.இராம.பெருமாள் PJK  (தலைவர்)
iii.34ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டக் குறிப்பு அங்கீகாரம் - செயலாளர்
iv.செயலறிக்கை அங்கீகாரம் (2009/2010) - செயலாளர்
v.01.01.2009 முதல் 31.12.2009 வரையிலான கணக்கறிக்கை அங்கீகாரம்
vi.(பொருளாளர் - திருமதி கமலாட்சி ஆறுமுகம் PPN., PPT)
vii.தீர்மானங்கள்
viii.பொது
ix.நன்றியுரை - திரு.ஜி.பி.செல்வம், துணைச் செயலாளர்


அன்புடன்,

சித.நாராயணன்
செயலாளன்

2009 - 2010 ஆம் ஆண்டுகளுக்கான செயலவையினர்

புரவலர்கள்
மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு SPMJ., SPMP., DPMP., PCM., AMN., அவர்கள்
மதிப்புமிகு டத்தோ கோ.இராஜு DPMP., PMP., KMN., PPT., PJK., JP
அவர்கள்

சட்ட ஆலோசகர்கள்
வழக்கறிஞர் எம்.தங்கவேலு PJK., LLB (Lond) CLP அவர்கள்
வழக்கறிஞர் அமுசு பெ.விவேகானந்தன் LLB (Lond) CLP அவர்கள்

தலைவர்
திருமிகு இராம.பெருமாள் AMP., PJK

துணைத் தலைவர்
தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் PPT., PJK

செயலாளர்
திருமிகு சித.நாராயணன் PPT

துணைச் செயலாளர்
திருமிகு ஜி.பி.செல்வம்

பொருளாளர்
திருமதி கமலாட்சி ஆறுமுகம் PPT., PPN

செயலவையினர்
திருமதி ப.தனலட்சுமி ஜெகநாதன்,  திருமிகு.பூ.அருணாசலம் PPN,
திருமிகு சி.முனுசாமி AMP., PPT., PJK,  திருமிகு க.லோகநாதன் PJK,
திருமிகு ஆ.கி.டேவிட் PPN., PPT,  திருமிகு கே.ஐ.நாராயணன்,
திருமிகு பெ.ஆறுமுகம்  PJK., Dr.திலகவதி,
திருமிகு இரா.மாணிக்கம் AMN.,  திருமிகு அருள் ஆறுமுகம் PJK

உட்கணக்காய்வாளர்கள்
திருமிகு முத்துப்பாண்டியன்
திருமிகு ஷாகுல் ஹமீது


August 18, 2010

செயலாளர் சித.நாராயணன் செய்தி

அருமை உறுப்பினர்களே,
அன்பார்ந்த இலக்கிய ஆர்வலர்களே,
இனிய வணக்கம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும்
கருப்பொருளை மையப் படுத்தி,
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”

உலகெலாம் வியக்க, வீறுநடை போட்டு”
கோவை மாநகரில்,
விழாக்கோலம் பூண்டதை நாமறிவோம்.


தமிழை முனைப்போடு
முன்னெடுத்து செல்வதற்காக நடத்தப்பட்ட
செம்மொழி மாநாட்டுச் சுவடுகள்
இன்னமும் நெஞ்சக் குழியில்
பசுமை கொண்டிருக்கும் தருணத்தில்,
நம்முடைய சங்கத்தின்
முப்பத்தைந்தாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்
உங்களைச் சந்திப்பதில்
உள்ளம் உவகை கொள்கிறது.


மகிழ்ச்சி கொள்ளும்
அதே வேலையில்
முப்பத்தைந்தாம் ஆண்டில் சங்கம்
அடியெடுத்து வைத்துள்ளதை
எண்ணிப் பார்க்கையில்
மலைப்பும் வியப்பும் ஏற்படுகிறது
.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில்,
எழுத்தாளர் மாநாடுகள், எழுத்தாளர் பேரவை,
இலக்கியக் கருத்தரங்குகள்,
தமிழறிஞர்களின் இலக்கிய நிகழ்ச்சிகள்,
சங்க வளர்ச்சிக்கு கலை நிகழ்ச்சிகள்,
சிறுகதைத் தொகுப்பு நூல்கள்,
மூத்த எழுத்தாளர்களுக்குப் பாராட்டுகள்
சிறுகதை-கவிதைப் பயிற்சிப் பட்டறைகள்,
அரசு மானியம்,
எழுத்தாளர்களுக்கு அரசு விருதுகள்,
இலக்கியச் சங்கமம் எனும் தலைப்பில்,
ஈப்போ, பங்கோர், லங்காவி ஆகிய நகரங்களில்

ஐந்து இலக்கிய நிகழ்ச்சிகள்!

அடுத்து,
நடைபெறவிருக்கும்,
ஆறாவது இலக்கியச் சங்கமத்தில்,
இலக்கிய நிகழ்வுகளுடன்,
கணினி பயிலரங்கம் நடத்தவும்,
சங்கத்திற்கென அகப்பக்கம்
உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்
இவை அனைத்தும் சஙத்தின் பரிணாமங்கள்.
இப்படிப்பட்ட,
நல்ல பணிகளைச் செய்துள்ள நிர்வாகத்தினர்,
பாராட்டுக்குரியவர்கள்.

அண்மையில்,
நமது சங்கத்தின்,
‘வேரும் விழுதுகளும்’
சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு
மகத்தான வெற்றியுடன்
அமைந்ததை நீங்கள் அறிவீர்கள்!

எடுத்த எடுப்பிலேயே
கணிசமான தொகை திரட்டப்பட்டதும்,
கட்டடம் வாங்கும் முயற்சியின் தொடக்கமே
அபாரமாக அமைந்து விட்டதும்,
இலக்கிய உணர்வாளர்களிடமிருந்து
சங்கத்திற்குக் கிடைத்த முதல் மரியாதை ஆகும்.


ஆதரவளித்த அனைத்து நன்நெஞ்சங்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக!

மாநிலத்தின் மாவட்டம் தோறும்
நூல் வெளியிடுவதற்கு சங்கம்
முயற்சித்து வருகிறது.


நூலின் அடுத்த அறிமுக நிகழ்வு
28.08.2010 இல்
அழகு நகரான தைப்பிங்கிலும்,
அதைத் தொடர்ந்து,
அரச நகரான கோலகங்சாரிலும்,
சித்தி பெற்ற சித்தியவானிலும்,
நாட்டின் தலைநகரிலும் நடத்துவதற்கு,
அவ்வட்டாரங்களில் உள்ள
நமது எழுத்தாளர்கள்
ஆவன செய்து வருகிறார்கள் என்பது
நமக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளாகும்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள
உறுப்பினர்களை அன்புடன்
அழைக்கின்றோம்.

நூல் வெளியீட்டின் மூலம்
கட்டட நிதி திரட்டும் அதே வேளையில்,
கட்டடம் எழுவதற்கு
உறுப்பினர்களின் பங்களிப்பும்
இருக்க வேண்டும் என்பதே
நமது அவா, விருப்பம், அன்பு வேண்டுகோள் எல்லாம்.

ஆக, தயாள உள்ளத்துடன்
உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.
அதற்கான பற்றுச் சீட்டு

உடனுக்குடன் உங்களுக்கு
வழங்கப்படும்.

ரிங்கிட் மலேசியா ஆயிரம் கொடுக்கும்
உறுப்பினர்களின் பெயர்கள்
கட்டடத்தில் பொருத்தப்படும்
பெயர் பட்டியலில் பதிக்கப்படும்.

இன்று நமது சங்கம்
ஓர் ஆலமரமாக வளர்ந்துள்ளது.
அது இன்னும் ஆழமாக வேரூன்றவும்,
விழுதுகள் பல பெருகவும்
மனமார்ச்சர்யமின்றி ஒன்றிணைந்து
செயலாற்றுவோம்!

- சித.நாராயணன்


August 17, 2010

கவிஞர் கூத்தரசன்

கவிஞர் கூத்தரசன் வாழ்க்கைக் குறிப்பு

திரு.கூத்தரசன் அவர்கள் தமிழ், தமிழர் என்ற தணியாத உணர்வு கொண்ட தமிழ்க் கவிஞர் ஆவார். தமிழாசிரியர் திரு.சி.கிருட்ணன் - திருமதி.சி.பாக்கியம் (அமிர்தம்) இணையருக்கு 1966 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர். நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும் தமிழ் உணர்வு மேலீட்டால் அதனைக் கூத்தரசன் என்று மொழி மாற்றம் செய்து கொண்டதில் வியப்பு  இல்லை.

ஆரம்பக் கல்வியை பேரா சங்கீத சபா தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலை உயர்நிலைக் கல்வியை ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியிலும், மெதடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டார். சென்னை மாணவர் மன்றத்தின் வழி தமிழ் இலக்கியத்தில் புலவர் மணிப் பட்டயமும், அமெரிக்கா டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் வழி எம்.பி.எ பட்டமும் பெற்றுள்ளார்.

இவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் கூத்தரசன் என்ற பெயரில் தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. மலேசிய வானொலியிலும் இவரின் கவிதைகள் ஒலித்துள்ளன. தமிழர் திருநாள் மேடைகளிலும் கரத்தரங்கங்களிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

தன்முனைப்புச் சொற்பொழிவுகள் நடத்துவதிலும் இவர் அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு கவிஞனாக வளர்வதற்கு ஆதரவாய் இருந்து யாப்பிலக்கணம் பயிற்றுவித்த தமிழ்க்குயில் கா.கலியபெருமாள், கனிமொழி குப்புசாமி ஆகியோரை இவர் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

பல்முனை அனுபவம் கொண்ட திரு.கூத்தரசன், பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும், பொன் பாவலர் மன்றத்தின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பதோடு பல குமுகாய இயக்கங்களிலும் அவ்வப்போது பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு திருமதி நா.இராணி (தமிழ்ப்பள்ளி ஆசிரியை) அவர்களோடு பகுத்தறிவுத் திருமணத்தின் மூலம் இல்லறம் பூண்ட திரு.கூத்தரசனுக்கு முகிலரசன், அறிவழகன் எனும் பெயர் கொண்ட இரு மகன்கள் உள்ளனர்.

வணிகத்துறையில் ஈடுபாடு கொண்டோருக்கு கவிதை வடிவிலானத் தன்முனைப்பு நூலையும், தன்னுடைய கவிதைத் தொகுப்பினையும் விரைவில் வெளியிடும் ஆர்வம் கொண்டுள்ள தமிழ் நெஞ்சர் கவிஞர் கூத்தரசனுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்புச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு தனது வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறது.

கவிஞர் அருள் க. ஆறுமுகம்

கவிஞர் அருள் க. ஆறுமுகம் வாழ்க்கைக் குறிப்பு

மரபுக் கவிதைத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு கவிதைகள் படைத்து வரும் திரு.அருள் க. ஆறுமுகம், சிலாங்கூர், கோலகுபு பாரு எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். தந்தையின் பெயர் கண்ணன். தாயாரின் பெயர் கோவிந்தம்மாள்.

பல்லாண்டுகளாக எழுத்துலகில் ஈடுபட்டு வரும் இவருடைய சிறந்த கவிதைகள் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேடைப் பேச்சு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரை ஆகியவற்றில் நாட்டம் கொண்டவரும் ஆவார். இவரின் தமிழ்ப் பணிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் அமரர் பாவலர் நா.இளங்கண்ணன், பாவலர் ஆ.கி.டேவிட், கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, பாவிலங்கோன் கோவி.மணிதாசன் ஆகியோர் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.

ஈப்போ பொன் பாவலர் மன்றத் தலைவராகச் செயலாற்றி வரும் திரு.அருள் க.ஆறுமுகம் அவர்கள், சமூகப் பணி செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். 2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக்குழுவின் தலைவராகவும் செயல் ஆற்றியுள்ள இவர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஈப்போ பாவாணர் தமிழ் மன்றம் ஆகிய சங்கங்களில் செயலவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

காவல் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி வரும் திரு. அருள் ஆறுமுகம், 6 ஆம் படிவ அடிப்படைக் கல்வியும், மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவராவார். அரச மலேசியக் காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளார்.

திருமதி தங்கம்பாளை இல்லறத் துணைவியாகக் கரம் பிடித்தக் கவிஞருக்கு ஜீவன், விஜேந்திரன் என்ற இரு ஆண்மகன்கள் உள்ளனர். ஜீவன் ஆஸ்திரேலியாவில் பொறியியல் இளங்கலைப் பட்டமும், தொழில்துறை முதுகலைப் பட்டமும் பெற்றவராவார். விஜேந்திரன் இந்தோனேசியாவில் MD மருத்துவம் பயின்று வருகிறார்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ள கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். மேலும் இவரின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.


தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ்

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் வாழ்க்கைக் குறிப்பு

ஆசிரியர் திரு.ஜி.மாணிக்கராஜ் அவர்கள் ஈப்போ மாநகரில் நன்கு அறிமுகமான  பிரமுகராவார். திரு.மா.ஞானமுத்து, திருமதி.ஜே. பொன்னுத்தாய் இணையரின் பதினொரு பிள்ளைகளில் முதல் மகனாக 14.11.1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஈப்போ தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் 1.4.1960 காலக் கட்டத்தில் பிற்பகலில் ஏ.சி.எஸ் பள்லியில் ஆங்கிலக் கல்வியையும் பயின்று வந்தார்.



அன்பும் பண்பும் நிறைந்த இவர், தமிழ் ஏழாம் வகுப்பிலும், சீனியர் கேம்பிரிட்ஜ் சோதனையிலும் தேர்வு பெற்றார். 1962 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியர் போதனாமுறை வகுப்பிலும் தேர்வு பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியில் உதவித் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆசிரியர் பணியினூடே உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, செஞ்சிலுவைச் சங்கம், தமிழ் இளைஞர் மணி மன்றம், தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பல்வேறு பொது அமைப்புகளிலும் சேவையாற்றி வந்துள்ளார். 1963ல் ஈப்போவில் தமிழ் இளைஞர் மணிமன்றம் அமைந்த போது அதன் அமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். ம.இ.கா. ஈப்போ பாராட் தொகுதி தாமான் பெர்த்தாமா கிளையின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

1973 ஆம் ஆண்டு தொடங்கி ஈப்போ, தமிழ் செட்டில்மெண்ட் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக 23 ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில் அதே பள்ளியில் அவருக்கு ஆரம்பக் கல்வியைப் புகட்டிய ஆசிரியை திருமதி. செல்வநாயகம் அம்மையார் அவர்களுக்கும் இவர் தலைமை ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதுவதிலும் நாட்டம் காட்டிய இவர் 1969 ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியை திருமதி. கோ. சந்திரகாந்தம் அவர்களோடு இல்லறம் பூண்டார். இவருக்குப் பிள்ளைச் செல்வங்களாக ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பணி ஓய்வு பெற்ற நிலையிலும் இன்றும் இவர் தமிழ் ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பல பொது அமைப்புகளுக்கு ஆலோசகராகவும், திருச்சபைகளில் பொது ஊழியராகவும் நற்றொண்டு ஆற்றி வரும் திரு.மாணிக்கராஜ் அவர்களின் சேவையைப் பாராட்டி பேரா மாநில மன்னர் இவருக்கு பி.ஜே.கே விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். இத்தகு பெருமைமிக்க நமது சங்க உறுப்பினர் திரு.மாணிக்கராஜ் அவர்களை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிச் சிறப்புச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.


August 16, 2010


பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
2009 - 2010 ஆம் ஆண்டுக்கான செயலறிக்கை


1.   முன்னுரை
1.1. பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2009 - 2010 ஆம் ஆண்டுகளுக்கான  செயலறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

2.  செயலவைக் கூட்டங்கள்
2.1 செயலவைக் கூட்டங்கள் நான்கு (4) நடைபெற்றன.

3.  உறுப்பினர்கள்
3.1 ஆயுள்கால உறுப்பினர்கள் 31 பேர்கள். ஆண்டுச் சந்தா உறுப்பினர்கள் 58 பேர்கள். ஆக மொத்தம் 89 உறுப்பினர்கள்.

4.  புரவலர்கள்
4.1 மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச. சாமிவேலு SPMP., SSAP., SPMJ.,  PCM.,  PNBS., AMN அவர்கள்;   மதிப்புமிகு டத்தோஸ்ரீ கோ.இராஜு DPMO., PMP., KMN., PPT., PJK., JP அவர்கள்

5.  சட்ட ஆலோசகர்கள்
5.1 வழக்கறிஞர் மு.தங்கவேலு PJK அவர்கள்; வழக்கறிஞர் அமுசு பெ.விவேகானந்தன் அவர்கள்

6.  தமிழர் திருநாள்
6.1  ஈப்போ தமிழர் திருநாள் விழாவில் தலைவர், துணைச் செயலாளர்,    செயலவை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

7.  நூல் அறிமுகம்
7.1 சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினரும், நல்ல இலக்கியவாதியுமான அமரர் சங்கநதி பெரியார் திரு.அமுசு பெரியசாமி அவர்களின் துணைவியாரும், சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினரும், வழக்கறிஞருமான திரு. அமுசு.பெ.விவேகானந்தன் அவர்களின் தாயாருமான திருவாட்டி.மாரியாயி பெரியசாமி அவர்கள் எழுதிய ‘சிந்தனை முத்துக்கள்’ எனும் நூல் அறிமுக விழாவில் தலைவர், செயலாளர் உட்பட செயலவை உறுப்பினர்களான திரு.பூ. அருணாசலம், திரு.க.லோகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சுங்கை சிப்புட் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரு.பூ.அருணாசலம், திரு.சித.நாராயணன் இருவரும் உரையாற்றினர்.

8.  விருந்து

8.1 ஈப்போ பொன் பாவலர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் உட்பட செயலவை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். பொன் பாவலர் மன்றக் கட்டட நிதிக்கு ரிங்கிட் 500.00 வழங்குவதாக நமது சங்கத்தின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

9.  மாநில அரசு மானியம்
9.1 பேரா மாநில அரசு வளாகத்தில் அமைந்துள்ள செர்பாகுணா மண்டபத்தில் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கான, மாநில அரசு மான்யம் வழங்கிய நிகழ்ச்சியில் தலைவர், செயலாளர், பொருளாளர் கலந்து கொண்டனர். இதில் ’வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டின் போது மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் அவர்கள் சங்கத்திற்கு மான்யம் வழங்குவதாகக் கூறி 10,000.00 ரிங்கிட்டுக்கான காசோலையை மாண்புமிகு மாநில முதல்வர் வழங்கினார்.

10. ’வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீடு
10.1 நூல் வெளியீட்டு விழா ஈப்போவில் ஒரு பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்றது. மதிப்புமிகு டத்தோஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் நூலினை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். திரு.அமுசு பெ விவேகானந்தன் 5000.00 ரிங்கிட் கொடுத்து முதல் நூல் பெற்றார். மதிப்புமிகு டத்தோஸ்ரீ அவர்கள் 20,000.00 வழங்குவதாக வாக்குறுதி தந்து முன்பண்மாக 2000.00 ரிங்கிட் ரொக்கமாக வழங்கினார். டத்தோ வீரசிங்கம் அவர்களும் டத்தோ கோ.இராஜு அவர்களும் தலா 10,000.00 ரிங்கிட் வழங்குவதாக ஒப்புதல் தந்தனர்.  இந்த நிகழ்ச்சியின் மூலமாக 58,764.00 மலேசிய ரிங்கிட் திரட்டப் பட்டது. (ரொக்கம், காசோலை, வாக்குறுதி)

11.  ஐம்பெருங்காப்பியம்
11.1 ஈப்போவில் பேரா மாநில அரசு வளாகத்தில் அமைந்துள்ள பேங்குவிட் மண்டபத்தில் நடைபெற்ற ‘ஐம்பெருங்காப்பியம்’ இலக்கிய விழாவில் தலைவர், செயலவை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

12.  உலகச் செம்மொழி மாநாடு
12.1 தமிழ் நாடு கோவை மாநகரத்தில் கடந்த ஜூன் திங்கள் 23 ஆம் தொடங்கி 26 ஆம் நாள் வரை உலகச் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இதில் நமது சங்கத்தின் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது சங்க உறுப்பினர் சிறுகதைச் சிற்பி ஏ.பி.மருதழகன் அவர்கள் ‘வான்புகழ் வள்ளுவரும், வையம்புகழ் கலைஞரும்’ எனும் தலைப்பில் கட்டுரை படைத்தார்.

13.  SPM கல்வி
13.1 எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்ப் பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற சமுதாயத்தின் கோரிக்கையை நமது சங்கமும் வலியுறுத்தி மலேசியத் தலைமை கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

14.  இந்திய ஆய்வியல் துறை
14.1  இந்திய ஆய்வியல் துறைக்கு தமிழறிஞரையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சமுதாயத்தின் வேண்டுகோளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் எழுதியதுடன், பத்திரிகைச் செய்தியும் விடுத்தது.

15.  அரசு சார்பற்ற இயக்க மாநாடு
15.1 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆலோசனை உருங்கிணைப்பு மாநாடு சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. மதிப்புமிகு டத்தோஸ்ரீ தலைமையில் மாநில முதல்வர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நமது சங்கச் செயலாளர் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டார்.

16..வள்ளலார் அன்பு நிலையம் திறப்பு விழா
16.1 ஈப்போ புந்தோங்கில் நடைபெற்ற வள்ளலார் அன்பு நிலையத்தின் திறப்பு விழா நமது சங்கத் துணைத் தலைவர் தமிழ்ச்சீலர் மா.செ.மாயத்தேவன் PPT., PJK அவர்கள் கலந்து கொண்டதுடன், பேரா மாநில ம.இ.கா  தலைவர் மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் அவர்களுடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார். இத்திறப்பு விழாவில் நமது சங்கத்தின் பலர் பங்கு பற்றிச் சிறப்பித்துள்ளார்கள்.

17. வாழ்த்துகள்

சங்கநதி எழுத்தாளரும்,  சங்க செய்லவை உறுப்பினருமான திரு.பூ.அருணாசலம் அவர்கள், எழுத்துலகில் நீண்ட காலமாக எழுத்துப் பணியாற்றி வருவதால், மலேசிய நண்பன் நாளிதழ், அன்னாரைப் பாராட்டிப் பெருமை சேர்த்தமைக்காக, சங்கம் பூவண்ணாவை வாழ்த்துகிறது.

18. இரங்கல்

மலேசிய முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், நமது சங்கத்தின் செயலவை உறுப்பினராகப் பணியாற்றியவருமான எழுத்தாளர் இரா.சிவஞானம் அவர்களின் மறைவுக்காகவும், பத்திரிகை ஆசிரியரும், நாடறிந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கவிஞரும், நமது சங்கத்தில் செயலவை உறுப்பினராகவும், துணைச் செயலாளராகவும் பணியாற்றிய கவிஞர் முரு.சொ.நாச்சியப்பன் அவர்களின் மறைவுக்காகவும் இரு குடும்பத்தினருக்கும் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது.

19. நன்றி

சங்கத்தின் எல்லா நடவடிக்கைகளுக்கு உதவியாக இருந்து வந்துள்ள செயலவையினருக்கும், சங்கத்தின் திட்டங்கள் வெற்றி பெற பேருதவியாக இருந்து வரும் நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சினிய நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறோம்.

சங்கக் கட்டட நிதிக்காக அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் ‘வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, நூலினை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு உதவிய மதிப்புமிகு டத்தோஸ்ரீ அவர்களுக்கும், வாழ்த்துரைகள் வழங்கிய மதிப்புமிகு டத்தோ கோ.இராஜு, மதிப்புமிகு டத்தோ எஸ்.வீரசிங்கம் ஆகியோருக்கும், நூல்கள் வாங்கி ஆதரவு நல்கிய இலக்கிய ஆர்வலர்களுக்கும், சங்கச் செய்திகளை வெளியிட்டு ஆதரவளித்த நேசன், நண்பன், ஓசை பத்திரிகைகளுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

சங்கத்தின் இலக்கியப் பணி நிலைபெறவும், சங்கக் கட்டடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறவும் உங்களின் நிலைத்த ஆதரவு வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

அன்புடன்,


சித.நாராயணன்
செயலாளன்